தலவாக்கலையில் மண்சரிவு ; எட்டு குடும்பங்கள் பாதிப்பு !

194 0

தலவாக்கலை நானுஓயா தோட்டத்தில் அமைந்துள்ள எட்டு வீடுகள் மண்சரிவு அபாயம் காரணமாக அந்த வீடுகளில் வாழ்ந்தவர்கள் அயலவர்களின் வீடுகளிலும், உறவினர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோட்டத்தில் உள்ள பல வீடுகள் மண்சரிவு ஏற்பட்டு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாரிய வெடிப்புக்களும் காணப்படுகின்றன.

அத்தோடு குறித்த தோட்ட குடியிருப்புக்களுக்கு செல்லும் கொங்கிறீட் பாதையும் பல இடங்களில் நிலம் தாழ்ந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

Leave a comment