சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – ரோஜர் பெடரர் காலிறுதிக்கு தகுதி!

212 0

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் லியானர்டோ மேயரை வீழ்த்திய ரோஜர் பெடரர் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று   நடைபெற்ற மூன்றாவது சுற்று போட்டியில் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், அர்ஜெண்டினாவின் லியானர்டோ மேயரை எதிர்கொண்டார்.
இதன் முதல் செட்டை பெடரர் வெறும் 15 நிமிடங்களில் 6-1 என எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் இந்த செட்டையும் பெடரர் 7-6(6) என கைப்பற்றினார். இதன்மூலம் 6-1, 7-6(6) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற பெடரர் காலிறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்த வெற்றி மூலம் சக நாட்டு வீரரான ஸ்டான் வாவ்ரிங்காவை எதிர்த்து காலிறுதியில் விளையாட உள்ளார் பெடரர்.

Leave a comment