பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

197 0

வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வடமாகாண மகளிர் விவகார அமைச்சு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்ததது. வவுனியா, வவுனியா தெற்கு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 10 குடும்பங்கள் இதற்கென தெரிவு செய்யப்பட்டிருந்தன.

வடமாகாண மகளிர் அமைச்சியினால் ஒதுக்கப்பட்ட  5 இலட்ச ரூபா நிதியில் இருந்து இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வவுனியா மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ரூபிணி வரதலிங்கம் மற்றும் பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Leave a comment