துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த யானைக் குட்டி உயிரிழப்பு

189 0
அநுராதபுரம் ஹிதோகம, ஹல்மில்லகுளம் தோட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்திருந்த யானை குட்டி ஒன்று உயிரிழந்துள்ளதாக  செய்தியாளர் கூறியுள்ளார்.

நேற்று அந்த யானைக் குட்டி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யானைக் குட்டியின் வலது பக்க கண், காது மற்றும் மார்பு ஆகிய பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்த யானைக் குட்டியை அவதானித்த பிரதேசவாசிகள் அநுராதபுரம் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இது சுமார் நான்கு வயதுடைய யானைக் குட்டி என்று ன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யானைக் குட்டியின் பிரேத பரிசோதனை நேற்று நடத்தப்பட்டுள்ளது.

Leave a comment