நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்

304 0

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மஹோற்சவம் இடம்பெறவுள்ளது.

இதனைமுன்னிட்டு கொடியேற்ற நிகழ்வுக்காக கொடிச் சீலை கையளிக்கும் நிகழ்வு சட்டநாதர் கோவிலை அண்மித்துள்ள வேல் மடம் முருகன் கோவிலில் நேற்று காலை 9 மணியளவில் நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, அங்கிருந்து தேரில் கொடிச் சீலை நல்லூர் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

Leave a comment