பாதையை கடக்க முற்பட்ட பெண் பலி

196 0

புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓல்கட் மாவத்தையில் இன்று (15) காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த பெண்ணை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ராகம, பட்டுவத்த பகுதியை சேர்ந்த 61 வயதுடைய புஷ்பா இந்திரானி எனும் கொழும்பு பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலக்கத்தில் எழுதுவினைஞராக கடமையாற்றும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் பாதையை கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் தனியார் பேருந்து ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன் புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment