யேர்மன் தலைநகரத்தில் நினைவுகூரப்பட்ட செஞ்சோலைச் சிறார்களின் படுகொலையின் 12 வது ஆண்டு நினைவேந்தல்

7614 0

வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 53 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாத பதிவாகிவிட்ட படுகொலை . தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 62 உறவுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது.12 ஆண்டுகள் கடந்து சென்றாலும் இப்படுகொலைக்கு நீதி கோரும் முகமாக யேர்மனியின் தலைநகரத்தில் பாராளுமன்றத்துக்கு அருகாமையில் Brandenburger Tor க்கு முன்பாக பேர்லின் வாழ் உணர்வாளர்களால் கவனயீர்ப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் தாயகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு நிகராக கொல்லப்பட்ட ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் மாதிரி கல்லறைகள் அமைக்கப்பட்டு வேற்றின மக்களுக்கு ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை எடுத்துரைக்கும் முகமாக ஆங்கிலத்திலும் யேர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் விளக்கமளிக்கப்பட்டது.

Leave a comment