கம்பளைப் புகையிரத நிலையத்திற்கு அருகில் இளைஞன் ஒருவனின் சடலம் மீட்பு

247 0

கம்பளைப் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதுண்டு இறந்திருக்கலாம் என நம்பப்படும் இளைஞன் ஒருவனின் சடலம் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர் .

நேற்று (14) காலை நாவலப்பிட்டியிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற புகையிரதத்தின் சாரதியே சடலம் கிடப்பதனை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சடலத்தில் நிறையக் காயங்கள் காணப்படுவதால் இரண்டு புகையிரதங்களில் மோதுண்டு இருக்கக் கூடுமென நம்பப்படுகிறது.

மீட்கப்பட்ட சடலத்திற்குறிய நபர் இன்னும் அடையாளம் காணப்பட வில்லை என்பதோடு சடலம் தற்பொழுது கம்பளை வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளை கம்பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a comment