பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார். இன்று மாலை ஏழு மணியளவில் கிளிநொச்சிக்கு சென்ற அவர் கிளிநொச்சி கரடிபோக்குச் சந்திக்கருகில் உள்ள தும்பினி விகாரைக்குச் சென்று அங்கு விகாரபதியை சந்தித்து கலந்துரையாடியதோடு வழிபாடுகளில் ஈடுப்பட்டார்.
நேற்று இரவு கிளிநொச்சியில் தங்கியிருக்கும் பிரதமர் இன்று மன்னார் மடுவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.