மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா!

245 0

மன்னார் மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று காலை 6.30 மணிக்கு கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் ஏனைய மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கின்றனர்.

இன்று காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஆரம்பமாகி ஒப்பக்கொடுக்கப்பட்டு வருகின்றது.

திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம்பெற்று திருச்சொரூப ஆசிர்வாதத்துடன் நிறைவடையவுள்ளது.

மடுத் திருத்தலத்திற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 6 இலட்சத்திற்கும் அதிகமான அனைத்து இன பக்தர்களும் வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment