நடு இரவில் பெண் உப பொலிஸ் பரிசோதகரின் அறைக்குள் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர்

230 0

மிரிஹான பொலிஸ் நிலையத்தின் பெண்கள் விடுதியில் பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தங்கியிருந்த அறைக்குள் ஜன்னல் ஊடாக நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு 1.30 அளவில் நடந்துள்ளது. அறைக்குள் சத்தம் கேட்டதை அடுத்து நித்திரையில் இருந்து எழுந்த பெண் உப பொலிஸ் பரிசோதகர், மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர், ஜன்னலில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று அதிகாலை மூன்று மணியளவில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் கட்டளையிடும் தகவல் பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், பிரதான வாயிலில் பாதுகாப்பு கடமையில் இருந்த நிலையில், உப பொலிஸ் பரிசோதகரின் அறைக்குள் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர், நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

Leave a comment