திருகோணமலையில் திருட்டு மின்சாரம் பெற்ற மூவர் விளக்கமறியலில்

251 0

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருட்டு மின்சாரம் பெற்ற மூவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டள்ளது.

குறித்த சந்தேகநபர்களை இன்று திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, கன்னியா, அண்ணமாவெளி பகுதியைச் சேர்ந்த 50,72 மற்றும் 36 வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சந்தேகநபர்கள் வீட்டுக்கும், வீட்டுத்தோட்டங்களுக்கும் திருட்டு மின்சாரத்தினை பயன்படுத்தி நீர் இறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையிலே திருகோணமலை பிராந்திய மின்சார சபையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸாரும், மின்சார சபையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது மூவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment