சட்டவிரோத கட்டிடங்கள் அனைத்தும் அகற்றப்படும் – இமானுவேல் ஆனோல்ட்(காணொளி)

326 0

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட, சட்டவிரோத கட்டிடங்கள் அனைத்தும் அகற்றப்படும் என, மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

மாநகர சபைக்குட்பட்ட, குறைந்தளவு நிலப்பரப்பு உடைய காணியைக் கொண்ட மக்கள், அனுமதி கிடைக்காது என்ற நிலையில், சட்ட விரோத கட்டிடங்களை அமைத்து வருகின்றனர் எனவும், ஆனால் மக்கள் மாநகர சபை அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது, அவர்களுக்கு தகுந்த நிலையில் அனுமதி அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Leave a comment