வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் இன்று மதியம் தனியார் பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த தனியார் பஸ் பயணிகளை ஏற்றுவதற்காக சூடுவெந்தபுலவு பகுதியில் தரித்து நின்ற போது அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து தனியார் பஸ்ஸின் பின்பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி 23 வயது மதிக்கத்தக்க இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை உளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.