பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தற்பொழுது மூடப்பட்டுள்ள அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்த அறிவித்துள்ளார்.
இருப்பினும், பொறியியல் பீடத்துக்கான கல்வி நடவடிக்கைகள் மாத்திரம் ஆரம்பிக்கப்படாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி பொறியியல் பீடத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமையைத் தொடர்ந்து பீடங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.