வடக்கு மாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் வெளிநாடு செல்வதற்கு விடுமுறைக்கு ஆளுநர் குரேயிடம் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு அனுமதி வழங்கப்படாத நிலையிலும், வெளிநாட்டுக்குச் சென்று திரும்பியுள் ளார்.
வடக்கு மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் வெளிநாட்டுக்குச் செல்லவதற்கு ஆளுநரின் அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும்.
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், வெளிநாடு செல்வதற்கு அனுமதிகோரி வடக்கு மாகாண ஆளுநருக்கு அவைத் தலைவர் ஊடாக அனுப்பியுள்ளார்.
வடக்கு அமைச்சர்கள் யார் என்பது தொடர்பில் சர்ச்சை நிலவுகின்றது. இதனைக் குறிப்பிட்ட ஆளுநர், திருமதி அனந்தி சசிதரனின் வெளிநாட்டுப் பயணத்துக்கான விடுமுறைக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால், திருமதி அனந்தி சசிதரன் கடந்த வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் திருமதி அனந்தி சசிதரன் உறுப்பினராக, சென்று வந்த வெளிநாட்டுப் பயணத்துக்கான அனுமதியை கோரியுள்ளார். அவைத் தலைவர், அனுமதி கோரலை சபைக்கு நேற்றுச் சமர்பித்தார். சபையின் அனுமதியைப் பெற்றுக் கொண்டார். வடக்கு மாகாண ஆளுநருக்கு அதனை அனுப்பி வைக்கவுள்ளார்.