சில புகையிரதங்கள் சேவையில்

200 0

புகையிரத ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்ற போதிலும் புகையிரத சேவைகள் இடம்பெற்றுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை 9 ரயில்கள் பல இடங்களில் இருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கண்டி, அனுராதபுரம், மஹாவ, ரம்புகணை, காலி, மாத்தறை மற்றும் அவிசாவளை ஆகிய இடங்களில் இருந்து தலா ஒரு ரயில் வீதம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சிலாபத்தில் இருந்தும் இரண்டு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும் சகல புகையிரத நிலையங்களுக்கும் பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment