வேலைநிறுத்தத்துக்கு சம்பளத்தை அதிகரித்தால் நாட்டில் அராஜக நிலை தோன்றும்- மஹிந்த

216 0

தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களுக்குப் பயந்து சம்பளங்களை அதிகரிக்கப் போனால் நாட்டில் அராஜக நிலைமை தோன்றும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நேற்று ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்த திடீர் பணிப்பகிஷ்கரிப்பு மனித நேயமற்ற ஒரு நடவடிக்கையாகும். இந்த தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் கயிறிழுப்பு நடைபெறுவதாக கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லையெனவும் அமைச்சர் இன்று (09) கூறினார்.

விவசாய அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Leave a comment