செந்தமிழ் தாயின் தமிழ் பிள்ளை. தமிழ் மக்களின் தமிழ் எழுத்துக்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் கருணாநிதி அவர்கள். அரசியலின் நுணுக்கங்களை நன்கு அறிந்து அதற்கேற்ப அரசியல் சதுரங்க வேட்டையில் அதன் காய்களை நகர்த்துவார். அவரின் வாழ்க்கை வரலாற்றை படிக்க, எப்போதும் எல்லோருக்கும் ஒரு வித ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. இவரை போன்ற சொல்லாடலை வேறு எவராலும் கையாள முடியுமா..! என வியக்கும் அளவிற்கு அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்து விடுவார். தமிழ் மொழிக்கு இவர் ஆற்றிய பங்கு எண்ணற்றவை. அவரின் இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் அவர் பார்த்த சவால்கள் பல. அவற்றையெல்லாம் சிதறடிக்க அவர் பயன்படுத்திய யுத்திகள் ஏராளம்.
மற்ற அனைவரை காட்டிலும் உடல் வலிமை, மன வலிமை ஆகிய இரண்டிலும் ஒரு படி முன்னோக்கியே இருந்தார் கலைஞர். இன்று இவர் நம்மை விட்டு பிரிந்தாலும், என்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். கடைசி காலத்தை தவிர இதற்கு முன் அவர் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். முதுமையின் காரணமாகவே இன்று அவர் உடல் நிலை சரி இல்லாமல் இறந்து விட்டார். எத்தகைய உணவு பழக்கம், உடற்பயிற்சிகளை மேற்கொண்டிருந்திருந்தால் இத்தனை வயது வரை அவர் ஆரோக்கியமாக உயிர் வாழ்ந்திருப்பார் என்பதை எண்ணி பாருங்கள். அவரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பற்றி இந்த பதிவில் மனமாற தெரிந்து கொள்வோம்.
தின உணவு முறை :-
எப்போதும் உணவு பழக்கத்தில் கவனத்துடன் செயல்படுவாராம். சரியான வேலைக்கு உணவுகளை எடுத்து கொள்வார். காலையில் இட்லி – சாம்பார் அல்லது ஏதாவது ஒரு வகை சட்னியுடன் சாப்பிடுவார். மதியம் வேக வைத்த காய்கறிகள், கீரைகள், சாம்பார் ஆகியவற்றை உண்பாராம். மாலையில் தோசை போன்ற விரைவாக செரிமானம் ஆக கூடிய உணவுகளையே எடுத்து கொள்வார்.
விறால் மீன் விரும்பி..!
கலைஞருக்கு நெருக்கமான பல நண்பர்கள் இப்போதும் கூறும் ஒரு விஷயம் என்னவென்றால் அவர் சீரான உணவு முறையையே எப்போதும் பின்பற்றுவார் என்பதே. அசைவம் என்றாலும் அளவோடு அதனை உண்பார். ஆரம்பத்தில் அசைவம் உண்ணும்போது விறால் மீன் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும் என அவரது நெருங்கிய வட்டத்தினர் கூறுவார்கள்.