விசாரணை அறிக்கையை பொலிஸார் இன்னும் சட்டமா அதிபருக்கு கொடுக்கவில்லை!

198 0

விஜயகலா மகேஸ்வரன் குறித்து முன்னெடுத்த விசாரணை அறிக்கையை பொலிஸார் இன்னும் சட்டமா அதிபருக்கு கொடுக்கவில்லை.

ஆகவே அந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டதும் அவர் அதை என்னிடம் ஒப்படைப்பதாக கூறியுள்ளார். அதன் பின்னரே என்னால் இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் குறித்த கருத்தை முன்வைத்து சர்சைக்குள்ளாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இன்று பாரளுமன்றத்திற்கு வருகை தந்து ஆளும் தரப்பின் பின்வரிசை ஆசனத்தில் அமர்ந்தார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய பொது எதிரணி உறுப்பினர் விமல் வீரவன்ச, விஜயகலா மகேஸ்வரன் எம்.பி குறித்து எடுத்துள்ள ஒழுக்காற்று நடவடிக்கை என்ன என சபாநாகரிடம் கேள்வி எப்பிய போதே சபாநாயகர் மேற்கண்ட பதிலை விமல் வீரவன்சவிடம் தெளிவுபடுத்தினார்.

Leave a comment