புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பின

218 0

புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

பொல்கஹவெல, பனலிய பகுதியில் இரு புகையிரதங்கள் நேற்று ஒன்றுடன் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதம் மீள திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதனால் தடைப்பட்டிருந்த புகையிரத சேவைகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (06) மாலை கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தப் போது, பின்னால் வந்த ரம்புக்கனை நோக்கி பயணிக்கும் புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த விபத்தில் 32 ​பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment