ரெலோவில் இருந்து பயனில்லை தனிவழி செல்கிறேன்! – கணேஷ் வேலாயுதம்

435 0

தமிழ் ஈழ விடுதலை இயக்கதில் (TELO) இருந்து தான் விலகுவதாக அக்கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் கணேஸ்வரன் வேலாயுதம் அறிவித்துள்ளார். யாழில்.உள்ள தனியார் விடுதியில் நேற்று(6) மதியம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் , ரெலோவில் இருந்து விலகுவதாக அக் கட்சியின் செயலாளர் என். சிறிகாந்தாவிடம் கடிதம் மூலம் கடந்த 2ஆம் திகதி அறிவித்து விட்டேன். அதன் அடிப்படையில் தான் ரெலோ கட்சி இரண்டாக உடைந்தது என செய்திகள் வெளியாகி இருந்தன. அது உண்மையல்ல நான் மாத்திரமே ரெலோவில் இருந்து வெளியேறியுள்ளேன். கட்சியில் எந்த பிளவும் இல்லை.

மக்களது எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் கட்சியிலிருந்தவாறு என்னால் முழுமையாக பூர்த்தி செய்யமுடியவில்லை. இனிவரும் காலங்களில் மக்களின் தொழில் முயற்சிகள் கல்வி விளையாட்டுதுறை மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை மேம்படுத்துவதனை நோக்காக கொண்டு சமூகசேவையினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

மக்களது எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் கட்சியிலிருந்தவாறு என்னால் முழுமையாக பூர்த்தி செய்யமுடியவில்லை. இனிவரும் காலங்களில் மக்களின் தொழில் முயற்சிகள் கல்வி விளையாட்டுதுறை மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை மேம்படுத்துவதனை நோக்காக கொண்டு சமூகசேவையினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

Leave a comment