தேர்தலை நடாத்தாமல் போனமைக்கு காரணம் கூறுவதற்கு அல்ல தேர்தல்கள் ஆணைக்குழு இருப்பது எனவும் தேர்தலை நடாத்துவதற்கான சகல வழிகளையும் உருவாக்கி தேர்தலை நடாத்துவதற்காகும் எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இன்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
ஆணைக்குழு நினைத்தால் தேர்தலை நடாத்தலாம். அதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடாத்தாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளது. அங்குதான் பிரச்சினையுள்ளதாகவும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டினார்.