புதிய அரசியலமைப்பினூடாக அதிகாரங்கள் பகிரப்படும்-சம்பந்தன் நம்பிக்கை

301 0

r-sampanthanநாட்டில் தயாரிக்கப்படுகின்ற புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரதேச ரீதியான அதிகாரங்கள் அதிகளவில் பகிரப்படும் என தான் எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சம்பூர் வித்தியாலயத்தில் விவசாய கண்காட்சி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தற்போதுள்ள அரசியலமைப்பின் ஊடாக மாகாணங்களுக்கு ஓரளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தமிழ் மக்களினால் கோரப்படுகின்ற அதிகார பகிர்வு இதுவரை கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.