தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான, ஆட்சிக் கவிழ்ப்பு போராட்டம் தற்போது கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் “ஜன பல சேனா” என பெயரில் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.