மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-நாமல்

195 0

அரச ஊழியர்களுக்கான பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு இதுவரையில் சரியான முறையில் நிறைவேற்றப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசுடன் ஒப்பிடுகையில் கடந்த அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைத்து நேற்று (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ​போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தற்போதைய அரசு விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment