யாழ்ப்பாணம் கொக்குவிலில், வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர், தாக்குதல் (காணொளி}

526 0

யாழ்ப்பாணம் கொக்குவிலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் வான் ஒன்றுக்கு தீ வைத்ததுடன்இ வீட்டிலுள்ள பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றுள்ளனர்.

கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இன்று பிற்பகல் 1.00மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாள்களுடன் சென்ற 8 பேர் கொண்ட குழுவினர், பட்டப்பகலில் இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டுத் தப்பித்துச் சென்றுள்ளனர்.

வாள்களுடன் புகுந்த கும்பல், வீட்டின் முன் தரித்து நின்ற ஹயஸ் வாகனத்தின் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்தியதுடன், அதன் முன் பக்கத்தில் தீ வைத்துள்ளனர்.

அத்துடன்,வீட்டுக்குள் இருந்த பெறுமதியான பொருள்களையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்திற்குள் 8 பேர் கொண்ட ஒரே குழுவினர், கொக்குவில், ஆனைக்கோட்டை மற்றும் வண்ணார்பண்ணை ஆகிய இடங்களில் 5 வன்முறைச் சம்பவங்களில் இடம்பெற்று போதும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

 

 

Leave a comment