பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் 48 மணி நேர வேலைநிறுத்தம் – புகையிரத தொழிற்சங்கம்

215 0

புகையிரத மேற்பார்வை அதிகாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று இடம்பெறும் கலந்துரையாடலின் போது தீர்வு கிடைக்காவிடில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 48 மணித்தியாலங்களுக்கு பணியிலிருந்து நீங்குவதாக அத்தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இடம்பெறவுள்ளது.

குறித்த ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் அமைச்சரவை பத்திரமொன்றுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக குறித்த தொழிற்சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி வழங்கி மூன்று மாதங்கள் கடந்த பின்னரும், இதுவரை அதனை நடைமுறைப்படுத்தாததன் காரணத்தால் இந்த பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment