யுத்தத்தினால் துன்பத்தினை அனுபவித்த கிழக்கிலுள்ள பல கிராமங்களையும் அபிவிருத்தியின்பால் கொண்டுவருவது தமது பிரதான நோக்கு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பில் வைத்து இன்று (29) தெரிவித்துள்ளார்.
ஏறாவுர் நகரிலுள்ள பிரதேச செயலகத்துக்கு புதிய கட்டிடமொன்றை திறந்து வைத்து உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார். 450 லட்சம் ரூபா செலவில் இந்த கட்டிடத்தை உள்நாட்டலுவல்கள் அமைச்சு நிர்மாணித்துள்ளது.
மட்டக்களப்பு விமான நிலையத்தை உள்ளக சிவில் விமானப் போக்குவரத்து தளமாக அபிவிருத்தி செய்து சுற்றுலாத் துறையை மேம்படுத்த பாரிய வேலைத்திட்டமொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.