எமது அரசாங்கம் வரும் வரை பார்த்திருக்க முடியாது- பசில்

192 0

இந்த அரசாங்கம் விமான நிலையம், துறைமுகம் என்பவற்றை மட்டுமல்ல, கிராமங்களிலுள்ள நாட் சந்தைத் தொகுதிகளையும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாத்தாண்டிய நகர சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

இந்த அரசாங்கம் நாட்டிலுள்ள அத்தனை சொத்துக்களையும் வெளிநாட்டவருக்கு விற்பனை செய்யத் துணிந்துள்ளது. உலகிலுள்ள அத்தனை உடன்படிக்கைகளையும் செய்து  இதனை முன்னெடுத்து வருகின்றது.

நாம் இதனை உடன் நிறுத்த வேண்டும். எமது அரசாங்கம் வரும் வரை பார்த்திருக்க முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment