மக்களுக்குப் போன்றே, பாராளுமன்றத்திலுள்ள அரசாங்க எம்.பி.களுக்கும் இந்த அரசாங்கம் வேண்டாமல் போயுள்ளதாகவும் மிக விரையில் அனைவரும் எதிர்க் கட்சித் தரப்புக்குத் தாவி 19 ஆம் திருத்தத்தை மாற்றியமைக்க உதவுவார்கள் என முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் போட்டியிட முடியும் என 19 ஐ மாற்றினால் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் போட்டியிடுவது அவ்வளவு கடினமான ஒரு விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.
பதுளையில் வைத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.