கண்டி, அளுத்கம சம்பவங்கள் இனி ஒருபோதும் நடந்துவிடக் கூடாது- ரணில்

305 0

இன்னுமொரு  போருக்கு முகம்கொடுக்கும் சக்தி தேசத்துக்குக் கிடையாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இனத்தாலும், மதத்தாலும், மொழியாலும் முரண்பட்டு நாட்டை அழிவுக்குள்ளாக்கியது போதும் எனவும் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இன, மத, மொழி பேதம் மறந்து, அனைவரும் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் எனவும்  பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2015ல் மலர்ந்த நல்லாட்சி மூலம் கடந்த மூன்று வருடங்களில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதில் கணிசமான முன்னேற்றத்தை எட்டியுள்ளோம்.

கண்டியில், அளுத்கமவில மற்றும் சில இடங்களில் நடந்தது போன்ற சம்பவங்கள் இனியொரு போதும் நடந்துவிடக் கூடாது.

இன்றைய மாணவர்கள் எமது எதிர்காலத் தலைவர்களாவர். அவர்கள் எதிர்பார்க்கும் வளமுள்ள நாட்டைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பாரிய கடப்பாட்டை அரசு கொண்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

2017  டிசம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் இரண்டாம் மொழியில் திறமைச் சித்தியடைந்த மாணவ, மாணவியரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. இதில்  கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment