ஜனாதிபதி தனக்கு குறைகூறியதாக பத்திரிக்கையில் வந்த செய்தி பொய்யானது மற்றும் அது ஜனாதிபதியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று வெளிவேரிய கிரிக்கித்த ஸ்ரீ பமுனு பௌத்த மத்தியஸ்தானத்தில் இடம்பெற்ற பௌர்ணமி விசேட சமய நிகழ்வின் பின்பு ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ´நான் அமைச்சரவையில் இடம்பெறுகின்றவற்றை வெளியில் சொல்பவன் அல்ல. ஆனால் இதை நான் சொல்ல வேண்டும். அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்னவும் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி என் மீது குறை கூறவில்லை என்று.
ஆனால் அப்படி ஒரு செய்தியை ஊழல் வாதிகளுடன் தொடர்புடைய பத்திரிக்கையிலேயே வெளியானது. இந்த செய்தியானது எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் எமது ஜனாதிபதியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும். நான் ஓருபோதும் நினைக்கமாட்டேன் ஜனாதிபதி அப்படியொரு வார்த்தையை தெரிவித்திருப்பார் என்று. அது ஒரு போலியான செய்தி. மக்கள் செல்வாக்கற்ற அரசியல் பலமற்றவர்களே இந்த மாதிரியான செய்திகளை வெளியிடுவார்கள்.
அவர்கள் பின்கதவால் பதவிக்கு வர நினைக்கின்றனர். அவர்கள் ஊழலின் மூலம் கருப்பு பணத்தை சம்பாதித்தவர்கள். அதனால் தான் கடந்த தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடிந்தது´ என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
´நான் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் சில பொருத்தமற்ற விடயங்களை இனங்கண்டேன். நான் அவரைப் போல பெரிய அளவில் சட்டத்தை பயின்றவன் அல்ல. எனக்கு விளையாட்டு தொடர்பான சட்டங்கள் பற்றிய அறிவு உண்டு.
ஆகவே தான் நான் முயற்ச்சி செய்தேன் சில குறிப்பிட்ட விடயங்களை தெளிவுபடுத்த. ஆனால் விளையாட்டத்துறை அமைச்சர் அதனைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை. காரணம் சில ரேஸ்புகி வைத்திருப்பவர்களின் மறைமுக அலுத்தம் காரணமாக´ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

