கொழும்பின் சில பகுதிகளுக்கு மின்சாரத் தடை

210 0

நாளை (27) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கொழும்பின் சில பகுதிகளுக்கு மின்சாரத் தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

132 கிகா வெட் மின் கட்டமைப்பில் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இந்த மின்சாரத் தடை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரத் தடை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது​.

Leave a comment