சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்துவதற்காக புதிய வேலைத்திட்டம்-நிமல் சிறிபால டி சில்வா

548 0

இலங்கையில் சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ரத்மலான, மட்டக்களப்பு ஆகிய விமான நிலையங்களை நவீன மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment