களுத்துறை, நாகொட பிரதேசத்தில் சொத்துப் பிரச்சினையால் ஒருவர் கொலை

489 0

களுத்துறை, நாகொட பிரதேசத்தில் தடியால் தாக்குதல் நடத்தி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டின் அறையில் இருக்கும் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சொத்துப் பிரச்சினையால் இந்தக் கொலை நிகழ்ந்துள்ளதாகவும், சந்தேகநபர் தற்போது பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளது.

சந்தேகநபரை கைது செய்வதற்காக தெற்கு களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment