ஓய்வூதியம் பதிவு செய்வதற்கான இறுதி திகதி அறிவிப்பு

332 0

விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம் கொடுப்பனவு முறையின் கீழ், மீள பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இதுவரையில் மூன்று இலட்சத்து 80 ஆயிரம் பேர் இந்த ஓய்வூதிய கொடுப்பனவிற்கு பதிவு செய்துள்ளதாக ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முடிந்த வரையில் விரைவாக பதிவுகளை மேற்கொள்ளுமாறும் தற்பொழுது ஓய்வூதியம் பெறும் அரச சேவையாளர்கள் இதற்காக மீள பதிவு செய்ய வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையில் இருப்போர் மாத்திரமே பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். விதவைகள் உள்ளிட்டோர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு முறைமைகளை முறையாக முன்னெடுக்கும் பொருட்டு இணையத்தள தரவு கட்டமைப்பு ஒன்றை அமைப்பதே இதன் நோக்கமாகும். இதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஓய்வூதிய கொடுப்பனவு ஆணையாளர் நாயகம் ஜகத் டயஸ் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment