சட்டவிரோதமான முறையில் தங்கத்தை நாட்டிற்குள் கடத்த முயன்ற இலங்கை பெண் கைது

242 0

சட்டவிரோதமான முறையில் மூன்று கோடிக்கும் அதிக பெறுமதி வாய்ந்த தங்கத்தை நாட்டிற்குள் கடத்த முயன்ற இலங்கை பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையித்தில் வைத்து இன்று காலை சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் 10 தங்க பிஸ்கட்டுகளையும் மற்றும் ஒருத்தொகை தங்க ஆபரணங்களையும்  தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து நாட்டிற்குள் கடத்தி வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு வெல்லம்பிடியவைச் சேர்ந்த 30 வயதான குடும்ப பெண்ணாவார்

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 30,693,955 ரூபா பெறுமதியான  5 கிலோ 185 கிராம் தங்கத்தினை சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.மேலும் கைது செய்யப்பட்ட பெண்ணிற்க்கு 25 இலட்சம் ரூபா தண்டமாக விதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை சுங்கப்பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment