கல்வி நிர்வாக சங்கத்தினரின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தம்

229 0

கல்விச்சேவைக்கு அரசியல் ரீதியில் உள்ளீர்ப்பு செய்த பெயர்பட்டியலை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக கல்வி நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காலை குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி நிர்வாக சேவை சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் நீல் அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அதன்படி, பாடசாலைகள், வலயக்கல்விக் காரியாலயங்கள்,, ஆசிரியர் கலாசாலைகள் மற்றும் ஆசிரியர் மத்திய நிலையங்களில் நாளை இடம்பெறவிருந்த ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment