வன்முறை சம்பவங்களால் சேதமடைந்த சொத்துக்களுக்கு நஷ்ட ஈடு வழங்க அனுமதி

329 0

கிங்தொட்ட மற்றும் அம்பாறை பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் சேதமடைந்த சொத்துக்கள் மற்றும் மதவழிபாட்டு நிலையங்களுக்கான நஷ்ட ஈட்டை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று (25) இடம்பெற்ற அமைச்சரை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் கிங்தொட்ட மற்றும் இவ்வருடம் அம்பாறை பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் சேதமடைந்த சொத்துக்கள் மற்றும் மதவழிபாட்டு நிலையங்களுக்கான நஷ்ட ஈட்டை வழங்கவதற்காக இதற்கு முன்னர் இது போன்ற சம்பவங்களுக்காக எவ்வாறு நஷ்ட ஈடு வழங்கப்பட்டதே அந்த முறையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

Leave a comment