பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் அனந்தி சசிதரன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

263 0

வடமாகாண மகளிர் விவகார அமைச்சினால் 2018ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வேலணை மற்றும் ஊர்காவற்துறை பிரதேச செயலகங்களிற்கு உட்பட்ட பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வுக்கு வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமை தாங்கி தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார்.

பெண்தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில், வேலணை மற்றும் ஊர்காவற்துறை பிரதேச செயலகங்களின் சமூக சேவைகள் உத்தியோகத்தர்களால் குறித்த பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வேலனை பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட 12 பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு சிறுகடை வியாபாரம், கோழி வளர்ப்பு, கடல்தொழில், மோர்மிளகாய் உற்பத்தி, விவசாயம் மற்றும் அழகு நிலையம் நடாத்துவதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 08 பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு கோழி வளர்ப்பு, விவசாயம் மற்றும் வடகம் உற்பத்திக்கான வாழ்வாதார உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டன.

வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் 2018.07.24ம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 02.30மணிக்கு வேலனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி.ரூபினி வரதலிங்கம், வேலனை பிரதேச செயலர் திரு.சோதிநாதன், கிரம உத்தியோகத்தர்கள், சமூகசேவை உத்தியோகத்தர்கள், அமைச்சு மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a comment