100,000 ரூபா வரையான கடன் தொகையை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி

253 0

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் பரிந்துரைக்கு அமைய, நுண் நிதி நிறுவனங்களால் பெண்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையில் 100,000 ரூபா வரையான பகுதியை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

மேலும், எதிர்காலத்தில் வழங்கப்படும் அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை ஆண்டு ஒன்றிற்கு 30 சதவீதத்திற்கு இடைபட்டதாகவும் அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கே இந்த விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், குருநாகல், புத்தளம், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகியவை 12 மாவட்டங்கள் வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment