தனியார் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடனை நிவாரண முறையில் செலுத்த அனுமதி

261 0

சிறிய அளவிலான தனியார் நிதி நிறுவனங்களின் ஊடாக மக்களுக்கு வழங்கியுள்ள கடன், நிவாரண முறையில் செலுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. 

இதன்கீழ் வரட்சியில் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களின் மக்களின் கடன்களை திரும்ப பெற்றுக் கொள்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் சஜித் பிரேமதாஸ இதனைக் கூறினார்.

இதேவேளை கம்பெரளிய வேலைத்திட்டத்தை மிகவும் முறையாகவும் செயற்திறனுடனும் பரந்தளவில் செயற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

Leave a comment