ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் 55000 குற்றங்கள்-சம்பிக்க

315 0

ராஜபக்ஷக்களின் கடந்த ஆட்சிக் காலத்தில், சுமார் 55 ஆயிரம் குற்றங்கள் பதிவாகியுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர், பாட்டளி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியின் அமைச்சர்கள் எவராவது,போதைபொருள் கடத்தலில் ஈடுபடும் பாதாள உலக கோஷ்டியினரோடு தொடர்பு வைத்திருந்தால் அதுதொடர்பில் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தைபோன்று, வௌ்ளை வேன் கலாசாரம் தற்போது இல்லை எனவும் அவ்வாறு ​வௌ்ளை வேன் கடத்தல்கள் இடம்பெறுவதாக ஆதாரங்கள் இருந்தால் அதனையும் நிரூபித்து காட்டவேண்டுமெனவும் ஒன்றிணைந்த எதிரணியினரிடம் சவால்விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a comment