உலக பெண்கள் மாநாடு சொல்லும் செய்திதான் என்ன?

6157 0

 கடந்த 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பன்னாட்டுப் பெண்கள் மாநாட்டு நிகழ்வுகளின் தொகுப்பு 

யாழ்ப்­பா­ணத்­தில் முதற்­ற­ட­வை­யாக பன்­னாட்டு பெண்­கள் ஆராய்ச்சி மாநாடு இந்த வரு­டம் இடம்­பெற்­றமை உல­கப் பெண்­க­ளுக்கே மிகப் பெரிய பேறாக குறிப்­பி­டப்­பட வேண்­டிய முக்­கிய விட­ய­மாக அமைந்­த­தெ­ன­லாம்.

யாழ்­மா­வட்ட அரச சார்­பற்ற இணை­யத்­தின் ஏற்­பாட்­டில் அதன் தலை­வர்   ரி .தேவா­னந்த் தலை­மை­யில் இந்த மாநாடு,சிறப்­புற இடம்­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

காலத்­தின் தேவை அறிந்து , இடத்­தை­யும் , கருப்­பொ­ரு­ளை­யும், தெரிவு செய்­தமை ஏற்­பாட்­டா­ளர்­க­ளின் பெண்­கள் மற்­றும் பெண்­ணி­யம் தொடர்­பான பெரும் கரி­ச­னையை வெளிப்­ப­டுத்தி நிற்­கின்­றது.

இரண்டு நாள்­கள் முழு­நாள் கருத்­த­மர்­வாக இடம்­பெற்ற இந்த மாநாட்­டில் 83 ஆய்­வா­ளர்­க­ளின் பங்­க­ளிப்­பில் 52 ஆய்­வா­ளர்­கள் தமது ஆய்­வு­க­ளைச் சமர்ப்­பித்­தி­ருந்­த­னர்.

நிகழ்­வுக்­கான வர­வேற்­பை­யும் ,வர­வேற்­பு­ரை­யை­யும், மாலை­நேர தலைமை தாங்­க­லை­யும் நிகழ்­வின் முக்­கிய பங்­காற்­றிய இலங்கை மக­ளிர் அபி­வி­ருத்தி நிலை­யத்­தின் பணிப்­பா­ளர் சரோஜா சிவச்­சந்­தி­ரன் வழங்­கி­யி­ருந்­தார் .

பய­ன­ளிக்­கத்­தக்க சமூக நிலைப்­பாடு தொடர்­பான ஆய்­வு­ரை­கள் முன்­வைக்­கப்பட்டன .

இந்த மாநாட்­டில் உரை­யாற்­றிய அறி­ஞர்­க­ளும், ஆய்­வுக்­கட்­டு­ரை­களை சமர்ப்­பித்த ஆய்­வா­ளர்­க­ளும் ஒட்­டு­மொத்த உல­கப்­பெண்­கள் பற்­றிப் பேசா­தமை வருத்­தத்­துக்கு உரி­ய ஒன்­று­தான்.

ஆனா­லும் அவ­ர­வர் தமது சமூக நிலைப்­பாடு சார்ந்து மிகத் துல்­லி­ய­மான ஆய்­வு­க­ளை­யும், பூரண விளக்­கங்­க­ளை­யும் முன்­வைத்­திருந்­தார்­கள்.

வர­லாற்­றில்­மு­தற்­ற­ட­வை­யாக- யாழ்ப்­பா­ணத்­தில் நடத்­தப்­பட்ட பன்­னாட்­டுப் பெண்­கள் மாநாட்­டில் இடம்­பெற்ற ஆய்­வு­க­ளும், கருத்­து­ரை­க­ளும், கருத்­த­ரங்­கில் பங்­கு­பற்­றிய பெண்­ணிய செயற்­பாட்­டாளர்­க­ளை­யும் ,ஆர்­வ­லர்­க­ளை­யும் தெளி­வ­டை­ய­வும் அடுத்த படி­நி­லைக்கு இட்­டுச்­செல்­ல­வும் வழி­கோலி உள்­ளது.

உலக அள­வில் ஒவ்­வொரு நிமி­டத்­துக்­கும் ஒவ்­வொரு பெண்ணும் ஏதோ ஒரு வகை­யில் அவள் சார்ந்த சமூ­கத்­தால் பாதிப்பை எதிர் கொள்­கின்­றாள் என்­பது மிக துல்­லி­ய­மான உண்மை.

அந்த துன்­பங்­கள்­தான் எவை ?அவை எப்­ப­டி­யாக பெண்­க­ளைத் தாக்­கு­கின்­றன என்­பது தொடர்­பில் எல்லாப் பெண்­க­ளுக்­கும் விளங்­க­வைக்க வேண்­டிய தேவை ஒவ்­வொரு அர­சுக்­கும் இருக்­கின்­றது .

யாழ்.மாவட்ட மேல­திக மாவட்டச் செயலர் முன்வைத்த பய­னுள்ள கருத்­துக்கள்

அதை உணர்ந்­த­வ­ராக முதல் நாள் நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்ட யாழ்­மா­வட் டத்­தின் மேல­திக மாவட்டச் செயலர் திரு­மதி சுகு­ண­வதி தெய்­வேந்­தி­ரம் பெண்­கள் தொடர்­பான முக்­கிய விட­யங்­களை முன்­வைத்­தார்   இவை யாழ்.மாவட்ட பெண்­கள்­தொ­டர்­பாக என்­றில்­லா­மல் ஒட்­டு­மொத்த பெண் இனத்­த­வர்­க­ளுக்­கும் வேண்­டப்­பட்ட கருத்­துக்­க­ள­மா­கவே அமைந்­தி­ருந்­தது.

யாழ்­மா­வட்­டத்­தில் மட்­டும் 30 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­கள் காணப்­ப­டு­வ­தா­க­கு­றிப்­பிட்ட அவர், மாற்­று­வ­லு­வு­டைய, கண­வன்­மார்­களை கொண்ட குடும்­பங்­கள், காணா­மல் போன கண­வன்­மார்­க­ளைக்­கொண்ட குடும்­பங்­கள், கண­வ­னால் கைவி­டப்­பட்ட பெண்­த­லை­மைத்­து­வம் கொண்ட குடும்­பங்­கள், என ஒவ்­வொரு வழி­யி­லும் வாழ்க்­கை­யில் தலைமை தாங்­க­வேண்­டிய கட்­டா­யத்­தில் உள்ள வெவ்­வேறு தரப்­பி­னரை பட்­டி­ய­லிட்­டார் .

நிலைத்து நிற்­கும் அபி­வி­ருத்­திக் குறி­யீட்­டில் பெண்­க­ளது பங்கு 2030 ஆம் ஆண்­ட­ள­வில் முழு­மை­யாக பூர்த்தி செய்­யப்­பட வேண்­டிய நிலை­யில் இருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

பெண்­க­ளுக்­கான வகி­பங்கு கட­டா­யம் பூர­ணப்­ப­ டுத்­தப்­ப­ட­வேண்­டும் ,போரால் பாதிக்­கப்­பட்ட பெண்­களை வலு­வூட்ட முடி­ய­வில்லை .

கிரா­மி­யப்­பெண்­கள் சரி­யான முறை­யில் வலு­வூட்­டி­டப்­ப­ட­வில்லை. 2030ஆம் ஆண்­டிலாவது எமது நாட்­டுப்­பெண்­கள் வலு­வ­டைய வேண்­டும் ,கட்­டுக்­கோப்­பான சமூ­கத்தை பெண்­களே உரு­வாக்­கு­கின்­ற­னர் ,1980ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் போர் குறித்த கார­ணங்­க­ளால் சமூ­கப் பெண்­க­ளின் பார்­வை­யில் பெரும் இடை­வெளி தோன்­றி­யுள்­ளது.

75 வீத­மான பல­தார திரு­ம­ணங்­கள் தற்­போது அதி­க­ரித்­தி­ருப்­ப­தற்­கான கார­ணங்­கள் என்ன? இன்­றைய இளை­யோ­ரின் நிலை சமு­தாய மாற்­றம் , மகிழ்ச்­சி­யான குடும்­பத்தை ஏற்­ப­டுத்த என்ன செய்­ய­வேண்­டும்? தற்­போது தலை­வி­ரித்­தா­டும் நுண்­க­டன் திட்டத்­தில் பெரிய இடர்­களை எதிர்­நோக்­கும் பெண்­கள், சிறந்த தலை­மைத்­து­வம் இன்­மை­யால் அந்த சவாலை எதிர்­கொள்ள முடி­யா­துள்­ள­னர் ,சிறந்த தலை­மைத்­து­வம் உள்ள பெண்­க­ளால் இதை முறி­ய­டிக்க முடி­யும் என்­றும், மேல­திக மாவட்டச் செயலர் தெரி­வித்­தார் , இது­தொ­டர்­பான விழிப்­பு­ணர்வு நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்­தா­லும், அதில் முழு­மை­யாக வெற்­றி­ய­டைய முடி­ய­வில்லை.

அதற்­குப் பெண்­கள் மற்­றும் பெண்­கள் அமைப்­புக்­க­ளி­ட­மி­ருந்து ஒத்­து­ழைப்­புக் கிடைக்­காமை பற்றி அவர் வருத்­தம் தெரி­வித்­தார் ,தற்­போது இளை­யோர் தடு­மா­று­வ­தற்­கான கார­ணம், சமூ­கத்­தில் பெண்­கள் தமக்­கான வகி­பா­வத்தை சரி­யாக பயன்­ப­டுத்­தா­மையே என அவர் தமது உரை­யில் குறிப்­பிட்­டார் .

இந்­தி­யா­வில் இருந்து வரு­கை­தந்த ஆய்­வா­ளர்­கள் மற்­றும் ,சிறப்பு விருந்­தி­னர்­க­ளில் எதி­ராஜ் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர் அரங்கமல்­லிகா தனது சிறப்பு உரை­யில், உலக நாடு­க­ளில் நடந்­தி­ருக்­கும் போரும், போருக்கு பின்­ன­ரான அர­சி­ய­லும் சொல்­வது பெண்­கள் எல்லா நேரங்­க­ளி­லும் கண்­கா­ணிக்­கப்­ப­டு­கின்­ற­னர் என்­ப­தைத்­தான்.

அதி­கா­ரம் என்­பது ஆதிக்­கம் சார்ந்­தது என­வும், அதி­கா­ரம் என்­பது எதிர்­வி­னை­யாற்­றக்­கூ­டிய தாக­வும் இருக்க வேண்­டும், இது பெண்­கள் விட­யத்­தில் முக்­கிய வகி­பா­வத்தை பெற­வேண்­டும் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்

உலக அரங்­கில் பெண் குழந்­தை­கள் கடத்­தப்­ப­டு­வ­தும், காணா­மற் போவ­தும் ஏன் என்ற கேள்வி எழு­கின்­றது பெண்­கள் பற்றி ஏரா­ளம் பேசி­னா­லும், பெண்­கள் ஒடுக்­கப்­ப­டு­வ­தும், கடத்­தப்­ப­டு­வ­தும் , துர்நடத்தைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தும் இன்­று­வரை நிறுத்­தப்­ப­ட­ வில்லை.

பொரு­ளா­தா­ரத்தை பெண்­கள் கையில் எடுக்க வங்­கிக்­க­டன்­கள் அவர்­க­ளுக்கு உத­வு­கி­றது .அவர்­கள் அதனைப் பயன்­ப­டுத்­த­ வேண்­டும் .

பெண்­கள் தத்­தம் உடல்­சார்ந்த விட­யங்­க­ளில் கரி­சனை கொள்­ள­ வேண்­டும். உடல்­சார்ந்து பார்க்­கும்­போது பெண்­கள் தம் உடல் ஆரோக்­கி­யத்தைப் பேணத் தயா­ராக இல்லை, கரு­வைச் சுமக்­கும் பெண்­கள் கூட, தத்­த­மது உடல் ஆரோக்­கி­யத்தை பேணு­வ­தில்லை.

பொது­வில் நாளாந்த வாழ்க்­கை­யில் பெண்­களில் 65 வீதமானோர் அதி­கம் பசி­யோடு வாழ்­வ­தாக உல­க­வங்கி நடத்­திய ஆய்வு கூறு­கின்­றது, என்­றார்

இலங்­கை­யில் பெண்­கள் போர்க்­கா­லத்­தில் போரிட்­டார்­கள் படைப்­பி­ரி­வு­க­ளின் தலை­வி­க­ளா­க­வும் இருந்­தார்­கள் அத­னால், கலாசார மாற்­றம், சமூ­க­மாற்­றம் என்பவை நிகழ்ந்­துள்­ளன. இருந்­தா­லும் பெண்­கள் பெரிய அள­வில் வளர்ந்­துள்ளார்களா?, என்­றால் ‘‘இல்லை’’ என்றே சொல்­ல­வேண்­டும் .

1992 ஆம் ஆண்டே கிரா­மப்­பு­றப் பெண்­கள் வாழ்­வி­ய­லில் குடும்­பங்­க­ ளுக்­குத் தலைமை தாங்­க­லாம் என்­ப­தற்கு இந்­தியா அனு­மதி வழங்கி இருக்­கின்­றது .

இப்­போ­தும் காப்­பாற்­றப்­ப­ட­வேண்­டி­ய­வர்­க­ளாக பெண்­கள் இருக்­கின்­றார்­கள். தாய்மை நிறைந்த பெண்­கள் கட­டா­யம் காப்­பாற்­றப்­ப­ட­வேண்­டி­ய­வர்­கள் .

இந்­தி­யா­வைப்­பொ­றுத்த வரை­யில் தலித் பெண்­கள் வாழ்க்­கை­யில் எவ்­வாறு பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர் என்­பதை உல­கம் தெரிந்­து­கொள்­ளல் அவ­சி­யம்.

போருக்­குப்­பின் இலங்­கை­யில் இருந்து புலம்­பெ­யர்ந்த பெண்­களே இலக்­கி­யம் சார்ந்த பெண் புரட்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­னர் . பெண்­கள் தத்­த­மது மொழி­மூ­ல­மாக மாற்­றத்தை முன்­வைத்­துள்­ள­னர், என­வும் அவர் கூறி­னார் .

மாநாட்­டில் நடத்­தப்பட்ட ஆய்­வு­க­ளும், உரை­க­ளும் சிறப்­பான பெண்­ணி­யத்­தைக் கட்­டி­யெ­ழுப்ப முனைந்த பேர­றி­வா­ளர்­க­ளின் ஆக்­க­பூர்வ சிந்­த­னை­க­ளா­கவே அமைந்­தி­ருந்­தன.

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்கினேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில், பெண்கள் கல்­வி­யி­லும் , சமூக வாழ்­வி­ய­லில், பொரு­ளா­தா­ரத்தி லும் முழுமை பெற­வேண்­டி­யுள்­ளது -.பெண்­கள் அர­சி­யல், சமூக ,பொரு­ளா­தா­ரத்­தில் தம்மை முழு­மை­யாக ஈடுபடுத்­திக் கொள்­ள­வேண்­டும், பெண்­கள் குடும்­பத்­தில் வகிக்­கும் தலை­மைத்­து­வம், நாட­ளா­விய ரீதி­யில் வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.

பெண்­கள் செய்­யும் வேலை­கள் நாட்டை வளப்ப டுத்­தும் என பல்­க­லைக்­க­ழக துணை­வேந்­தர் தெரிவித்­தார் . யாழ். மாவட்டச் செயலர் நா.வேத­நா­ய­கன் நிகழ்­வில் உரை­யாற்­றும்­போது முக்­கிய புள்­ளி­வி­ப­ரம் ஒன்றை வெளி­யிட்­டார் 80வீத­மான பெண்­கள் தமது பய­ணங்­க­ளின்­போது துன்­பு­றுத்­தப்­ப­டு­கின்­ற­னர் என்ற செய்­தியே அது.

இதனைப் பெண்­களே முறி­ ய­டிக்­க­ வேண்­டும். பெண்­கள் தமது பாது­காப்­பி­லும் , பய­ணங்­க­ளி­லும் தம்மை, தமது வகி­பா­வத்தை பயன்­ப­டுத்­த­வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருப்­பதை இது சுட்­டிக்­காட்­டு­ கின்­றது .

‘‘இலங்­கை­யில் ஒழுக்­க­மான பாது­காப்­பான பணி­யிட சூழல் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் என­வும் ,மது­பான சாலை­களை மூடு­வ­தற்கு எவ­ரும் ஆர்ப்­பாட் டம் செய்­ய­வில்லை என்­ப­தை­யும் மாவட்டச் செயலர் சுட்­டிக்­காட்­டி­னார் ,பல்­க­லைக்­க­ழ­கத்­தில் 65 வீத­மான பெண்­கள் கல்­வி­கற்­றும், பெண்­கள் மத்­தி­யில் சமூக மாற்­றத்தை ஏற்­ப­டுத்­த­மு­டி­ய­வில்லை என்­றார் அவர்.

நிகழ்­வில் சமர்ப்­பிக்­கப்­ப­ட்ட ஆய்­வு­கள், குறிப்­பிட்ட அளவு முடி­வு­களை வெளிப்­ப­டுத்­த­வில்லை. இதனை ஒரு குறை­யாக கரு­தாது ஆய்­வு­கள் சார்ந்த கருத்­துக்­களை நாம் எமது பார்­வைக்கு எடுத்­துக்­கொண்­டால் ,- முதல் ஆய்­வுக்­கட்­டு­ரை­யாக மருத்­து­வ­பீட மாண­வன் வேத­நா­ய­கம் அன்­டனி சரோன் பெண்­க­ளின் மார்­பக புற்­று­நோய் தொடர்­பில் தாதி­க­ளுக்­கி­டை­யில் மேற்­கொள்­ளப்­ப­ட்ட ஆய்­வொன்­றைச் சமர்ப்­பித்­தி­ருந்­தார் .

நீரி­ழிவு நோயை ஆரம்ப நிலை­யில் கட்­டுப்­ப­டுத்­தல், இரண்­டாம் நிலைக்கு இட்­டுச் செல்­லா­மல் பாது­காத்­தல் தொடர்­பான ஆய்­வ­றிக்­கையை வினித்ரா ஜெய­பி­ர­காஷ் வழங்­கி­யி­ருந்­தார்.

பெண் தாதி­யர் பணி­யில் வேலைத் தரத்தை பாதிக்­கும் கார­ணி­கள் என்­பது தொடர்­பாக ஸ்ரீபாலி நந்­த­கு­மார ஆய்­வ­றிக்­கை­யொன்றை வாசித்­தார்.

தரம் 8 மற்­றும் 9இல் கல்வி பயி­லும் பெண்­க­ளுக்கு இடை­யில் நோய்த்­தாக்­கம் மற்­றும் அத­னு­டன் தொடர்­பு­டைய கார­ணி­கள் தொடர்­பில் யாழ் கல்வி வல­யத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வ­றிக்கை ஜே.எ.ரி .ரி .என் .ஜெய­திஸ்ஸ என்­ப­வ­ரால் வாசிக்­கப்­பட்­டது.

வாழ்க்­கைத் தரம் மற்­றும் அத­னு­டன் தொடர்­பு­டைய கார­ணி­கள், முதிய பெண்களின் வாழ்­வி­ய­லில் செலுத்­தும் தாக்­கம் தொடர்­பாக நல்­லூ­ரில் உள்ள முதிர் வய­து­டை­யோரை வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வ­றிக்கை கே.தனு­ஜன் என்­ப­வ­ரால் சமர்ப்பிக்­கப்­பட்­டது.

அதே­போல மலை­யக பெருந்­தோட்ட ப் பெண்­க­ளின் சுகா­தா­ர­மும் அதன் சவால்­க­ளும் என்ற ஆய்­வும் புளோ­ரிடா சிமி­யோன் என்பவரால் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

மலை­நாட்டு பெண்­க­ளது வாழ்­வி­யல் சிர­ம­நிலை வெளிக்­கொ­ண­ரப்­பட வாய்ப்பு

அதே­போல மாநாட்­டின் தலைப்­புக்கு ஏற்ப வாழ்க்­கையை தொலைத்த ஊர் தலை­மு­றை­யி­னர், போரின் பின்­ன­ரான பெண் தலை­மைத்­துவக் குடும்­பங்­க­ளின் வாழ்­வி­யல்,- என்ற தலைப்­பில் சரோஜா சிவச்­சந்­தி­ர­னும் ,வடக்­கில் மாற்­றுப்­பா­லி­னத்­தா­ரின் உரி­மை­கள் தொடர்­பாக எஸ்.ஏ.சந்­தோஷ் என்­ப­வ­ரும்,பெண்­க­ளுக்­கெ­தி­ரான பால்­நிலை வன்­முறை; ஓர் பார்வை என்ற தலைப்­பில்

புளோ­ரிடா சிமி­யோன் என்­ப­வ­ரும், ‘பிந்­தைய போர்ச் சூழ­லில் இய­லாமை கொண்ட பெண்­கள் அதி­கா­ரம்’ என்ற ஆய்­வ­றிக்­கை­யாக இந்­திய ஆய்­வா­ளர் ஆர் .எம் .தமிழ்ச்­செல்­வன் என்­ப­வ­ரும்,

‘ஈழப்­போ­ரில் பாதிக்­கப்­ப­ட்ட பெண்­க­ளும் கரு­ணைப்­பால உத­வித்­தி­ட்ட­மும்’ என்ற தலைப்­பில் வலன்ரீனா இளங்­கோ­வன் என்­ப­வ­ரும், முன்­னாள் பெண்­போ­ரா­ளி­க­ளின் சமூக பொருத்­தப்­பாடு தொடர்­பில் ஜே.கீர்த்­த­னா­வும் , ‘சமூ­க­ம­ய­மாக்­கல் –பெண் போரா­ளி­கள் எதிர்­கொள்­ளும் சிக்­கல்’­கள் என்ற தலைப்­பில் சிந்­துஜா லிங்­க­சா­மி­யும் , ‘பெருந்­தோட்­டத் துறை­யில் பெண்­கள்’ என்ற ஆய்­வ­றிக்­கையை சரஸ்­வதி சிவ­கு­ரு­வும், ‘பெண் தலை­மைத்­து­வம் பிரச்­ச­ னை­க­ளும் சவால்­க­ளும்’ போன்ற பெண்­கள் தொடர்­பான கருத்­தி­யல்­க­ளைக்­கொண்ட தலை­யங்­கங்­க­ளில் துறை சார்ந்­த­வர்­க­ளும் ,அது­தொ­டர்­பான துறை­யில் பல்­க­லை­யில் கல்வி பயி­லும் மாண­வர்­க­ளும் ,பல்­கலை விரி­வு­ரை­யா­ளர்­க­ளா­லும் ஆய்­வு­கள் செய்­யப்­பட்ட மதிப்­பீட்டு முடி­வு­க­ள் தொடர்­பான விளக்­கங்­க­ளும் வழங்­கப்­பட்­டன .

இந்­திய அண்ணா பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இருந்து ஆய்­வு­ரையை சமர்ப்­பித்­த­வர்­க­ளில் ‘மலம் அகற்றிச் சுத்­தம்­செய்­யும் தொழில் புரி­யும் தலித் பெண்­கள் எதிர்­கொள்­ளும் பிரச்­ச­னை­க­ளும் சவால்­க­ளும்’ தொடர்­பான ஆய்­வ­றிக்­கையை சுசீந்­திரா பழ­னிச்­சாமி சமர்ப்­பித்­தி­ருந்­தார்.

இந்த ஆய்­வு­க­ளின் மூலம் ஓர­ள­வுக்கு உலக நாடு­க­ளி­லும், அண்டை நாடு­க­ளில் இருக்­கும் பெண்­க­ளும், நம் நாட்டு பெண்­க­ளும் எதிர்­கொள்­ளும் சவால்­கள், சிக்­கல் கள் தொடர்­பில் வெளிக்­கொ­ணர பெண்­ணி­ய­மும் பெண் அமைப்­புக்­க­ளும் இன்­ன­மும் கடு­மை­யாக உழைக்க வேண்டி உள்­ளது என்­பதை இந்த மாநாடு தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது .

இலங்­கை­யின் தலைமை அமைச்­சரது மனைவி முதல் நாளின் இரண்­டா­வது அமர்­வில் ஆற்­றிய உரை, இலங்கை அரசு, பெண்­கள் தொடர்­பான கரி­சனை என்ற பதத்­துக்­குள் சற்­றும் உள் நுழை­ய­ வில்லை என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டி­யது.பெண்­க­ளின் அர­சி­யல் வலு­வூட்­டி­டல் என்­பது இலங்­கை­யைப்­பொ­றுத்­த­வரை மிக­வும் குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றது என்­பதை திரு­மதி ரணில் விக்­கி­ரம சிங்க தெளி­வா­கச் சுட்­டிக்­காட்­டி­னார்.

அதே­போல் பெண்­க­ளின் வலு­வாக்கம், எல்­லாப்­ப­கு­திக்­கும் ஊடு­ரு­வாக்க நிலைக்கு இட்­டுச்­செல்­லப்­பட வேண்­டும் என­வும் அவர் விளக்­க­ம­ளித்­தார். வட­மா­கா­ணத்­தில் போரின் பின் பெண்­கள் மீதான அடக்கு முறை­கள் அதி­க­ரித்­தி­ருப்­பதை திரு­மதி விக்­கி­ர­ம­சிங்க தெளி­வு­ப­டுத்­தி­னார். இது எமது நாட்­டின் அர­சுக்­குச் சென்று சேர­வேண்­டிய மிக முக்­கி­ய­மான செய்­தி­யாக இருக்­கின்­றது.

வடக்­கைப் பொறுத்­த­வரை, பெண்­க­ளின் கண­வர்­மார் காணா­மல் போனமை தொடர்­பில் அரசு அதி சிரத்தை கொள்­ளா­மல் இருப்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­ய­தாக நாம் எடுத்­தும் கொள்­ள­லாம் .

அதே­போல வடக்­கு–­கி­ழக்கு மற்­றும் நாட்­டின் ஏனைய பகு­தி­க­ளின் பெண்­க­ளுக்கு அரச ,அரச சார்­பற்ற நிறு­வங்­கள் கூட பெண்­க­ளுக்­கான போதிய உத­வி­க­ளையோ வலு­வூட்­டல்­க­ளையோ அரசு வழங்­க­வில்லை என்ற உண்­மை­யையே அவர் சுட்­டிக்­காட்டி இருந்­தார் .

அவ­ரது முக்­கிய கருத்­தாக, பெண்­கள் கூட்­டாக இணைந்து பணி­யாற்றி இவற்­றைப் பெற்­றுக்­கொள்ள முயற்சிக்க வேண்­டும் என்­பதாக அமை­கி­றது. ஒட்­டு­மொத்­த­மாக பெண்­கள் என்போர், நாட்­டுக்­கான பங்­க­ளிப்பின் மிக முக்­கிய கார­ணி­க­ளில் மிக முக்­கி­ய­மான அங்­கம் என்­பதை இந்த மாநாடு எடுத்­துக் கூறி­யது .

ஆயி­னும் கூறப்­பட்ட கருத்­துக்­கள், கருத்­த­ள­வில் மாத்­தி­ரம் என்­றில்­லா­மல், அந்த நிகழ்­வுக்கு வரு­கை­தந்த அனை­வ­ரும் அவற்றை சமூக கீழ்­மட்­டப் பெண்­கள் வரை முக்­கிய விட­ய­மாக கரு­திக் கொண்டு சென்று சேர்க்க வேண்­டும் என்­பதே தேவை­யா­க­வும் அவ­சிய கட­மை­யா­க­வும் இருந்­தது.

அத­னை­விட உல­க­ளா­விய ரீதி­யில் பல நாடு­க­ளில் இருந்­தும் வருகை தந்த அறி­ஞர்­கள் ஈழப்­பெண்­க­ளின் நடை­முறை வாழ்­வி­யல் சிக்­கல்­களை நன்கு புரிந்­து­கொண்டு அவற்றை தம் அடுத்­த­கட்ட ஆய்­வு­க­ளுக்கு மாற்­றி­ய­மைத்து பெண்­க­ளுக்­கான வலு­வூட்­ட­லுக்கு ஆவன செய்­வார்­கள் என நம்­பு­வோம் .

குறிப்­பாக இலங்­கை­யில் மலை­யக பெண்­கள் தொடர்­பான பிரச்­ச­னை­கள் முதன் முத­லாக வெளி நாட்டு சமூ­கத்­தின் மத்­தி­யில் எடுத்­துக்­கூ­றப்­பட்­டுள்­ளது. மலை­ய­கப் பெண்­க­ளின் தொழில்­முறை மற்­றும் ஊதி­யம், தொடர்­பான பிரச்­ச­னை­க­ளுக்கு உட­ன­டித்­தீர்­வுக்கு இந்த பெண்­கள் மாநாடு வழி­வ­குக்­கும் என நம்­பு­வோம் .