நாட்டில் சரியான தலைமைத்துவம் இல்லை-சமல்

502 0

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட காரணம் சரியான தலைமைத்துவம் இல்லாததே என ஐக்கிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தரை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது சரியான மற்றும் உறுதியான தலைமைத்துவம் ஒன்று இருந்ததே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறான தலைமைத்துவம் இல்லை எனவும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருடங்களுக்கு அதிகமான காலம் கடந்து விட்ட போதிலும் இதுவரையில் நாட்டிற்கு எவ்வித நலனும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment