இராணுவத்துக்குப் பொலிஸ் அதிகாரம்- மஹிந்த

261 0

இராணுவத்துக்குப் பொலிஸ் அதிகாரத்தைக் கொடுத்து பொலிஸ் இராஜ்ஜியமொன்று உருவாகிக் கொண்டு வருவதாகவும், இதற்காக நீதிமன்றமும் பயன்படுத்தப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

இன்று அபயராம விகாரையில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கம் அதிகூடிய அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment