சேருவில, ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் என்று சந்தேகிக்கப்படும் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 2.69 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
42 மற்றும் 45 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களே பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.