149 பேரை காவு வாங்கிய பாகிஸ்தான் குண்டுவெடிப்பு – மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக் கொலை

394 0

பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின் போது நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்ற தேர்தல் வரும் 25–ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, அந்நாட்டின் மஸ்தாங் மாவட்டத்தில் பலுசிஸ்தான் அவாமி கட்சியின் பேரணியை குறிவைத்து கடந்த 13-ம் தேதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பொதுமக்கள் 149 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 200க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலை ஹபீஸ் நாவாஸ் எனும் பயங்கரவாதி நிகழ்த்தியதும், அதற்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஹிதயத்துல்லா என்பவன் மூளையாக செயல்பட்டதும் விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், காலாட் மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருந்த ஹிதயத்துல்லாவை பாகிஸ்தான் பாதுகாப்புப்படையினர் சுட்டு கொன்றுவிட்டதாக கலாட் துணை ஆணையர் கைசர் கான் தெரிவித்துள்ளார்.

Leave a comment