மண்மேட்டில் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு

205 0

மஹியங்கனை அக்கர 80 பிரதேசத்தில் மண் மேடொன்றுக்கு அடிப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். மகாவலி கங்கைக்கு அருகில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரே இவ்வாறு மண்மேட்டில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மண்மேட்டில் சிக்குண்டதில் படுகாயமடைந்த நபர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார். சொரபொர பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment